உயர் வகுப்பினருக்கு கட் ஆப் 28 மதிப்பெண்கள் 24/07/2019


பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கட் ஆப் மதிப்பெண் 28
Jul 24, 2019


எஸ்.பி.ஐ. வங்கி கிளர்க் தேர்வில் குறைந்தபட்ச கட் ஆப் மதிப்பெண் பொதுப்பிரிவினருக்கு இணையாக ஓ.பி.சி மற்றும் எஸ்.சி. மாணவர்களுக்கு 61.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 28-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கியின் 8653 கிளர்க் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் 22, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது இந்த தேர்வு முடிவுகள் நேற்று மாலை www.sbi.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இதில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. இதன்படி முதல் நிலைத் தேர்வு எழுதியவர்கள் அடுத்த கட்டமான மெயின் தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற கட் ஆஃப் மதிப்பெண் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 28-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவினர், எஸ்.சி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 61.25-ஆகவும் எஸ்.டி. பிரிவினருக்கு 53.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு எழுதியவர்களில் இருந்து ஒரு பணியிடத்துக்கு 10 பேர் என்ற வீதத்தில் மெயின் தேர்வுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வு எழுதியவர்களில் குறைந்த எண்ணிக்கையிலே இருக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினர் அனைவருமே எளிதில் மெயின் தேர்வுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மெயின் தேர்வு அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஸ்டேட் வங்கித் தேர்வில் ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி. பிரிவினர் 61.25 கட் ஆஃப் மதிப்பெண்களும் எஸ்.டி. பிரிவினர் 53.75 கட் ஆஃப் மதிப்பெண்களும் எடுக்க வேண்டிய நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம் என்று குறிப்பிட்டு பாஜக அரசு சமூகநீதியை படுகுழியில் தள்ளியிருப்பதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019