புதிய அறிவிப்புகளின் எதிரொலி-நிர்மலா சீதாராமன் 26/08/2019
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகளின் எதிரொலி
Aug 26, 2019
பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டதை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை அதிகரித்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்தது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
மேலும் மந்த நிலையில் உள்ள ஆட்டோ மொபைல் துறையை ஊக்கப்படுத்தவும் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்குகளை வாங்கியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்த நேர முடிவில் 792 புள்ளிகள் உயர்ந்து, 37 ஆயிரத்து 494 புள்ளிகளில் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 228 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 57 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. பொதுத்துறை வங்கிகளுக்கு நடப்பு நிதி ஆண்டில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பால், எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சீனா உடன் விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்ததும், இந்திய பங்குச்சந்தையின் உயர்வுக்கு காரணமாக இருந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Aug 26, 2019
பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டதை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை அதிகரித்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்தது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
மேலும் மந்த நிலையில் உள்ள ஆட்டோ மொபைல் துறையை ஊக்கப்படுத்தவும் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்குகளை வாங்கியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்த நேர முடிவில் 792 புள்ளிகள் உயர்ந்து, 37 ஆயிரத்து 494 புள்ளிகளில் நிறைவடைந்தது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 228 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 57 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. பொதுத்துறை வங்கிகளுக்கு நடப்பு நிதி ஆண்டில் 70 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பால், எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்தன.
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சீனா உடன் விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்ததும், இந்திய பங்குச்சந்தையின் உயர்வுக்கு காரணமாக இருந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment