தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பௌலர்கள் அசத்தல்.! 21/10/2019

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பௌலர்கள் அசத்தல்..! தெ.ஆ., ஃபாலோ ஆன்...
Oct 21, 2019


இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களில் சுருண்டது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்திருந்த போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அணித் தலைவர் விராட் கோலி அறிவித்தார். தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார். ரகானே சதம் அடித்தார்.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்திலும் அந்த அணி தடுமாறியது. ஜுபைர் ஹம்சா மட்டும் பொறுமையுடன் ஆடி அரை சதம் கடந்தார். மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பவுமா, லிண்டே ஆகியோர் ஓரளவு ரன் சேர்த்தனர். இறுதியில் அந்த அணி 162 ரன்களில் ஆல் அவுட்டானது.

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது சமி, நதீம், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் 335 ரன்கள் பின் தங்கிய தென்னாப்பிரிக்கா அணி பாலோ ஆன் ஆனது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்சை அந்த அணி விளையாடி வருகிறது. 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019