வங்க கடலில், அந்தமான் அருகே உருவானது "புல் புல்" புயல்..! 07/11/2019
வங்க கடலில் உருவானது "புல் புல்" புயல்...
Nov 07, 2019
வங்க கடலில், அந்தமான் அருகே, நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது. புல் புல் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவியது. இது, நேற்று, மத்தியகிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று, புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு "புல் புல்" (Bul Bul) என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து, தெற்கு-தென்கிழக்கில், 730 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவிலிருந்து, 830 கிலோ மீட்டர் தொலைவிலும், "புல் புல்" புயல் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், இந்த "புல் புல்" புயல், அதிதீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள "புல் புல்" புயல், வடக்கு, வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம், பங்களாதேஷ் நோக்கி நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த "புல் புல்" புயல் மையம் கொண்டுள்ள மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், மீனவர்கள் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள "புல் புல்" புயல் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின், ஒருசில இடங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது.
அத்தனாவூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்று காலை நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வழக்கம் போல் 8 மணிக்கு வீடுதிரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை 9 மணிக்கு தனது மகன் ராபீன் செல்போன் நம்பருக்கு அழைத்த அருள், தன்னை யாரோ கடத்தி வைத்திருப்பதாகவும் 10 லட்சம் ரூபாய் கொடுத்து தன்னை மீட்டு செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து ராபீனுக்கு போன் செய்த மர்மநபர், 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் அருளை விடுவோம் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அருளின் மனைவி சாந்தி அளித்த புகாரின்போரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்த செல்போன் நம்பர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ளது தெரியவந்தது. இதனிடைய ராபீனை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள், பணத்தை குப்பம் மற்றும் கர்நாடக மாநில எல்லையான பங்காருப்பேட்டை இடையில் உள்ள வனத்தில் வந்து கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு கடத்தல் காரர்கள் சொன்ன இடத்துக்கு பணத்தை கொடுப்பது போன்று சாதாரண உடையில் சென்ற ஜோலார்பேட்டை போலீசார், கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து அருளை மீட்டதாக கூறப்படுகிறது. கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Nov 07, 2019
வங்க கடலில், அந்தமான் அருகே, நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது. புல் புல் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவியது. இது, நேற்று, மத்தியகிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று, புயலாக மாறியுள்ளது.
இந்த புயலுக்கு "புல் புல்" (Bul Bul) என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து, தெற்கு-தென்கிழக்கில், 730 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவிலிருந்து, 830 கிலோ மீட்டர் தொலைவிலும், "புல் புல்" புயல் மையம் கொண்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், இந்த "புல் புல்" புயல், அதிதீவிர புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள "புல் புல்" புயல், வடக்கு, வடமேற்கு திசையில், மேற்கு வங்காளம், பங்களாதேஷ் நோக்கி நகரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த "புல் புல்" புயல் மையம் கொண்டுள்ள மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில், மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், மீனவர்கள் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள "புல் புல்" புயல் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின், ஒருசில இடங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை மையம் கூறியிருக்கிறது.
அத்தனாவூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அருள். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நேற்று காலை நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வழக்கம் போல் 8 மணிக்கு வீடுதிரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை 9 மணிக்கு தனது மகன் ராபீன் செல்போன் நம்பருக்கு அழைத்த அருள், தன்னை யாரோ கடத்தி வைத்திருப்பதாகவும் 10 லட்சம் ரூபாய் கொடுத்து தன்னை மீட்டு செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
சிறிது நேரத்தில் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து ராபீனுக்கு போன் செய்த மர்மநபர், 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் அருளை விடுவோம் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அருளின் மனைவி சாந்தி அளித்த புகாரின்போரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சைபர் கிரைம் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுத்த செல்போன் நம்பர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ளது தெரியவந்தது. இதனிடைய ராபீனை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள், பணத்தை குப்பம் மற்றும் கர்நாடக மாநில எல்லையான பங்காருப்பேட்டை இடையில் உள்ள வனத்தில் வந்து கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு கடத்தல் காரர்கள் சொன்ன இடத்துக்கு பணத்தை கொடுப்பது போன்று சாதாரண உடையில் சென்ற ஜோலார்பேட்டை போலீசார், கடத்தல்காரர்களை சுற்றி வளைத்து அருளை மீட்டதாக கூறப்படுகிறது. கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment