குரூப் 4 தேர்வு பணியிடங்கள் எண்ணிக்கை 9,398 ஆக அதிகரிப்பு..! 26/11/2019

குரூப் 4 தேர்வு பணியிடங்கள் 9,398 ஆக அதிகரிப்பு...
Nov 25, 2019


குரூப் 4 தேர்வுப் பணியிடங்களின் எண்ணிக்கையை 9 ஆயிரத்து 398 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவை அலுவலர் உள்ளிட்ட 8 வெவ்வேறு பணியிடங்களில் காலியாக இருந்த 6,591 இடங்களுக்கான தேர்வு கடந்த செப்.1-ம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள் கடந்த நவம்பர் 12-ம் தேதி வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது குறிப்பிட்ட 8 பணியிடங்களில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை 6,591-லிருந்து 9,398 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது.

மேலும் தேர்ச்சி பெற்றோர் பட்டியலில் இருந்து 9,398 பணியிடங்களுக்கும் விரைவில் தகுதியான ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக TNPSC செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019