Posts

Showing posts from August, 2019

அசாமில் பரபரப்பு..... 01/09/2019

Image
தேசிய குடிமக்கள் பதிவேடு - அசாமில் பரபரப்பு.... Aug 31, 2019 அசாமில் இறுதிசெய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் சட்டபூர்வ இந்தியக் குடிமக்களாக ஏற்கப்பட்டுள்ளனர். அசாமில் வசித்து வரும் 19 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்படாததால், அவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. ஒரு நாட்டின் சட்டபூர்வ குடிமக்களை உறுதிப்படுத்தவும், வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளங் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அசாமை பொறுத்தவரை, வங்கதேச எல்லையில் அமைந்திருப்பதால், அந்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏராளமானோர் குடியேறிவிடுகின்றனர். இந்நிலையில், அசாமில் வசிக்கும் சட்டபூர்வ இந்திய குடிமக்களை அடையாளம் காணவும், அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வந்த சட்ட விரோத குடியேறிகளை கண்டறிந்து அகற்றவும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு முதன் முதலில் 1951ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதிக்குப் பிறகு, வங்கத...

வங்கிகளில் இருந்து ஓர் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்திருந்தால் 2% வருமான வரி 31/08/2019

Image
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் வருமான வரி பிடித்தம் Aug 31, 2019 வங்கிகளில் இருந்து ஓர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்திருந்தால்,ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 2 சதவீதம் Tds செலுத்த நேரிடும். திங்கட்கிழமை முதல் இம்முறை அமலுக்கு வருகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் சமூக ஊடகங்களில் மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை கணக்கில் 2020-21ம் ஆண்டில் இருந்துதான் இது கணக்கிடப்படும் என்றாலும் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31 வரை ஒருவர் வங்கிகளில் இருந்து ஒருகோடி ரூபாய்க்கு மேல் பணம் ரொக்கமாக எடுத்திருந்தால் அவரிடமிருந்து செப்டம்பர் முதல் தேதியில் இருந்து ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 2 சதவீதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வங்கி கணக்கில் அல்லது பல்வேறு கணக்குகளில் இருந்தும் தபால் நிலைய கணக்கில் இருந்தும் எடுத்த பணம் மொத்தமாக கணக்கிடப்பட்டு ஒரு கோடிக்கும், அதற்குமேலும் அதிகமாக இருந்தால், அதன் பின்னர் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போது 2 சதவீத...

ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய ஒரு புதிய எந்திரம் 31/08/2019

Image
ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய சிறப்பு எந்திரம் Aug 31, 2019 பிரான்ஸ் நாட்டில் ஒலி மாசு ஏற்படுத்தும் மோட்டார் பைக்குகளை சிறப்பு இயந்திரம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சத்தமாக ஒலி எழுப்பிக்கொண்டு செல்லும் பைக்குகளை ஒலி ராடார் என்று அழைக்கப்படும் இந்த இயந்திரம் மூலம் அடையாளம் கண்டு, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் உதவியால் அந்த பைக் இருக்கும் பகுதியை போலீசார் அறிந்துகொண்டு அபராதம் விதிக்க முடியும் என்று பாரிஸ் மேயர் Didier Gonzales தெரிவித்துள்ளார். இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இயந்திரத்தை பாரிசில் ஒலி மாசினை கண்காணித்து வரும் பிருட்பாரிப் நிறுவனத்தின் பொறியாளர்கள் உருவாக்கி உள்ளனர். 4 மைக்ரோ போன்கள் கொண்ட இந்த இயந்திரம், ஒலி எதிலிருந்து வருகிறது என்பதையும் கண்டறியக்கூடியது. இது தொடர்பான மசோதா பாரிஸ் மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த இயந்திரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு சோதனை செய்து பின்னர், எந்த அளவிலான சத்தத்திற்கு எவ்வளவு ...

சந்திரயான்-2 தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் பார்க்க உத்திரப்பிரதேச மாணவி தேர்வு 31/08/2019

Image
சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் பார்க்க முதல் ஆளாக உத்தரபிரதேச மாணவி தேர்வு Aug 31, 2019 நிலவில் விக்ரம் விண்கலம் தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் அமர்ந்து சேர்ந்து பார்க்க முதல் ஆளாக லக்னோ மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது.வருகிற 7-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் விண்கலம் தரை இறங்குகிறது. நிலவில் விக்ரம் விண்கலம் தரை இறங்குவதை பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மோடியுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை மாணவ- மாணவிகள் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் குவிஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 2 மாணவர்கள் தேர்வு செய்யும் வகையில் நடைபெற்ற போட்டியில் , லக்னோவைச் சேர்ந்த ரஷிவர்மா என்ற மாணவி வெற்றி பெற்றார். இவர் லக்னோவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித...

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது.... 31/08/2019

Image
தமிழகம் முழுவதும் நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வு Aug 31, 2019 அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், வரைவாளர் உள்ளிட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வை நடத்தும் பணிகளில் சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப் படவுள்ளனர். நாளை நடைபெறும் இந்த தேர்வுக்கு 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையத்துக்கு பேனா மற்றும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டுமே கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அவ்வாறு கொண்டு வரும் பொருட்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தரவியலாது என அரசு பணியாளர் தேர்வாணையம் தெர...

இன்றே கடைசி நாள்-வருமான வரி 31/08/2019

Image
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் Aug 31, 2019 வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2018 - 19ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்கான வருமான வரி படிவத்தை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும். அதற்குள் வருமான வரி படிவம் தாக்கல் செய்யாவிட்டால், தாமதக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த நேரிடும். வட்டி அபராதம் போன்றவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும் இதனிடையே வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள வருமானவரித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியானவை முற்றிலும் தவறான தகவல் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் அறிமுகம் 30/08/2019

Image
செப்டம்பர் 10ஆம் தேதி ஆப்பிளின் அடுத்த ஐபோன் அறிமுகம் Aug 30, 2019 ஆப்பிளின் செப்டம்பர் மாத நிகழ்வில் ஐபோன் 11 மாடல் ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகமாக உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. கிருஸ்துமஸ் விடுமுறை கால வியாபாரத்தை கருத்தில் கொண்டு ஆப்பிள் இந்த அறிமுக நிகழ்ச்சியை நடத்தும். அந்தவகையில் நடப்பாண்டில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சிலிகான் வேலி வளாகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐபோன்களில் பிராசசிங் பவர் மற்றும் கேமரா தரம் மேம்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் வளர்ந்து வரும் 5ஜி தொலைதொடர்பு சேவைகளுக்கு ஏற்ப எந்த மாற்றமும் இந்த ஐபோன்களில் செய்யப்படவில்லை எனவும தகவல்கள் தெரிவிக்கின்றன. சேவைகள், ஆப்பிளின் ஆக்சஸ்சரிஸ், ஐபேட் மற்றும் ஐபோன் விற்பனை அதிகரித்ததால் கடந்த காலாண்டின் இறுதியில் முன்பு இல்லாத வகையில் ஆப்பிளின் வருவாய் சிறப்பாக இருந்தத...

காபி கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சன்கிளாஸ்கள் 30/08/2019

Image
காபி கழிவுகளில் உருவாக்கப்படும் சன்கிளாஸ்கள் Aug 30, 2019 உக்ரைனில் காபி கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள குளிர் கண்ணாடிகள், பயனாளிகளுக்கு காபி நறுமணத்தை தருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒச்சிஸ் காபி நிறுவன சி.இ.ஓ. மக்ஸிம் ஹவ்ரிலென்கோ இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஒளியியல் வல்லுநர்கள் குடும்பத்தில் இருந்து வந்துள்ள மக்ஸிம், கண்பார்வை தொடர்பான பணியில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். காபி கழிவுகளை மறுசுழற்சி செய்து அறைகலன்கள், கோப்பை, அச்சடிக்கும் மை, உயிரி எரிபொருள் உள்ளிட்ட பொருட்கள் இதற்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றையெல்லாம் பின்னுக்குதள்ளும் வகையில் காபி நறுமணத்துடன் கூடிய குளிர் கண்ணாடியை மக்ஸிம் உருவாக்கியுள்ளார். இது வெற்றியடைவதற்கு முன்பு புதினா, கொத்தமல்லி, ஏலக்காய் உள்ளிட்ட மூலிகைப்பொருட்களை கொண்டும் சோதனை செய்துள்ளார். காபியின் நிறம் கருப்பு இருப்பதாலும் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யப்படுவதாலும் இந்த யோசனை வந்ததாக அவர் தெரிவிக்கிறார். 300 மாதிரிகள் வீணானதன் பிறகே சரியான குளிர் கண்ணாடி உருவாக்கப்பட்டது என்றும் ஒன்றின் விலை தற...

தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 30/08/2019

Image
தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் 30ம் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் Aug 30, 2019 தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கான வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை பல்வேறு வழிகளில் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்று ஒன்பது ஐந்து பூஜ்ஜியம் 1950 என்ற தொலைப்பேசி எண் மூலமாகவும் வோடர்ஸ் ஹெல்ப் லைன் எனப்படும் மொபைல் ஆப் அல்லது NSVP எனும் தேசிய வாக்காளர் சேவை வலைத்தளம் மூலமாகவும் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்திற்காக மாவட்டந்தோறும் அமைக்கப்படும் சிறப்பு மையங்களிலும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம். 
Image
வருமான வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை Aug 29, 2019 ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் உள்ளவர்களுக்கு, வருமான வரி விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைப்பது, வரி விதிப்பு அடுக்குகளை நான்கில் இருந்து 5ஆக உயர்த்துவது உள்ளிட்ட பரிந்துரைகளை, நேரடி வரி விதிப்பு முறை தொடர்பான ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் சாதக பாதகங்கள் குறித்து அலசும் செய்தித் தொகுப்பு தற்போதுள்ள வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வுக்கு உட்படுத்தி, நாட்டின் பொருளாதாரத் தேவைக்கு ஏற்ப, புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து பரிந்துரைப்பதற்காக, நேரடி வரி தொடர்பான பணிக்குழு கடந்த 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக்குழு, கடந்த வாரத்தில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில், வருமான வரி விதிப்பு அடுக்குகளை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தவும், சில அடுக்குகளுக்கு வருமான வரி விகிதத்தை குறைக்குமாறும் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, வருமான வரி விதிக்கப்படுவதில்லை. இந்த முதல் அடுக்க...

சிங்கிள்களுக்கான காதல் ரயில்...! 29/08/2019

Image
சிங்கிள்களுக்கான காதல் ரயிலை இயக்கிய சீனா..! Aug 29, 2019 சிங்கிள்களுக்கான காதல் ரயிலை சீனா கடந்த வாரம் இயக்கியது. சீனாவில் 70-களில் விதிக்கப்பட்ட ஒரே குழந்தைத் திட்டத்தால், பெரும்பாலான பெற்றோர், அதை ஆண்குழந்தையாக பெற்றுக் கொள்ள விரும்பி, பெண் சிசுக்களை கருவிலேயே அழித்தனர். அதன் விளைவாக அடுத்த 30 ஆண்டுகளில் 3 கோடி சீன ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு கணிப்பின் படி, சராசரியாக ஆயிரம் இளைஞர்களில் சுமார் 7 பேருக்குத்தான் திருமணமானது. இது நாட்டின் வளர்ச்சியையும், மனித வளத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்த சீனா 2016-ல் ஒரே குழந்தை என்ற திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. திருமணமாகாத சிங்கிள்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் பொருட்டு கடந்த 3 ஆண்டுகளாக காதல் ரயில் ஒன்றை இயக்கி வருகிறது. 10 பெட்டிகள் கொண்ட இந்த காதல் ரயிலில் திருமணமாகாத ஆண், பெண் என ஆயிரம் சிங்கிள்கள் பயணிப்பர். 2 பகல் ஒரு இரவு பயணிக்கும் இந்த ரயில், அவர்களை பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கான சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறது. உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ரயில...

உடல் நலத்தை பேண ஃபிட் இந்தியா இயக்கம் 29/08/2019

Image
இந்தியர்கள் உடல் நலனை பேண ஃபிட் இந்தியா இயக்கம் Aug 29, 2019 ஆரோக்கிய வாழ்க்கைக்காக உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அவற்றை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றும் நோக்கத்துடன் "ஃபிட் இந்தியா" இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தூய்மை இந்தியா இயக்கத்தைப் போல, "ஃபிட் இந்தியா" இயக்கத்திற்கும் மக்கள் பேராதரவு தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். "ஹாக்கி மந்திரவாதி" என போற்றப்பட்ட, மாபெரும் ஹாக்கி வீரரான தயான்சந்த், பிறந்த நாள் தேசிய விளையாட்டு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில், ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கி வைக்கப்படும் என பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடியுடன், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், விளையாட்டு, உடற்பயிற்ச...

பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு 28/08/2019

Image
ஐதராபாத் திரும்பிய பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு Aug 28, 2019 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஐதராபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பட்டத்தை பி.வி.சிந்து கைப்பற்றியுள்ளார். பயிற்சியாளர் புலேலா கோபிசந்துடன் (Pullela Gopichand) ஹைதராபாத் திரும்பிய அவருக்கு பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடந்த போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் 28/08/2019

Image
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் Aug 28, 2019 புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கழைக்கழக வளாகத்தில் பொறியியல் படிப்பு சார்ந்த புத்தக கண்காட்சியை பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்விக்கொள்கையை யாரும் எதிர்க்ககூடாது என்றார். புதிய கல்விக்கொள்கையில் பல நல்ல விஷயங்கள் அமைந்திருப்பதாகக் கூறிய அவர், அதனை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுரப்பா வலியுறுத்தினார். புதிய கல்விக்கொள்கையை முழுமையாக அமல்படுத்தாவிட்டால் அதன் நோக்கம் வீணாகிவிடும் என்றும் சுரப்பா தெரிவித்தார்.

மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது சாம்சங் 28/08/2019

Image
செல்போன் விற்பனையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது சாம்சங் Aug 27, 2019 செல்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த தகவல் தொடர்பு, நிதி தொடர்பான சர்வதேச முன்னணி ஆய்வும் மற்றும் ஆலோசனை நிறுவனமான கார்டர் , நடப்பு நிதியாண்டின் இராண்டாவது காலாண்டில் ஏழரை கோடி செல்போன்களை சாம்சங் நிறுவனம் விற்பனை செய்ததாக கூறியுள்ளது. கடந்த 6 காலாண்டுகளாக தொடர்ச்சியாக விற்பனையில் பின்னடவை சந்தித்த நிலையில், இப்போது சாம்சங் முன்னிலை பெற்றுள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்சி ஏ வரிசை செல்போன்களின் விற்பனை சூடு பிடித்து உள்ளதும், குறைந்த மற்றும் நடுத்தர விலை ரகங்களின் விற்பனை நன்றாக இருப்பதும் சாம்சங் நிறுவனத்திற்கு கை கொடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இரண்டாவது காலாண்டில் செல்போன் விற்பனை 1.7 சதவிகிதம் சரிந்து மொத்தம் 368 மில்லியன் போன்கள் விற்பனையாகி உள்ளன என்றும், நடுத்தர மற்றும் குறைந்த விலை செல்போன்களின் விற்பனையை விட உயர்விலை செல்போன்களின் விற்பனை மந்தமாகி உள்ளது என்றும...

நடிகர் சங்க வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி 28/08/2019

Image
நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான வழக்கு தள்ளுபடி Aug 28, 2019 பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு 26 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி தி.நகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, அதுவரை கட்டிடப்பணிகளை மேற்கொள்ள இடைக் கால தடைவிதித்து இருந்தது. பின்னர் வழக்கறிஞர் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து, கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் ஆட்சேபனை இல்லை எனவும், பொதுமக்கள் பயன்படுத்தும் 33 அடி அகல சாலையையும் சங்க கட்டிடத்...

சந்திரயான்-2 பாதை 3வது முறையாக வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது 28/08/2019

Image
சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றம்..! Aug 28, 2019 சந்திரயான் 2 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டப்பாதை 3வது முறையாக வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலாவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக ஜூலை மாதம் 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், கடந்த 20 ஆம் தேதி முதல் நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது. விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திட்டமிட்டபடி இன்று காலை 9 மணி 4 நிமிடங்களுக்கு 3வது முறையாக நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் சுற்றி வரும் உயரம் மாற்றப்பட்டது. 1190 விநாடிகள் நீடித்த இந்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நிலாவில் இருந்து 179 முதல் 1412 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சுற்றி வரும். அடுத்தகட்டமாக வரும் 30 ஆம் தேதி மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்தியான் 2 விண்கலத்தில் இணைக...

தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை நெருங்குகிறது 28/08/2019

Image
சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை 29 ஆயிரத்து 704 ரூபாயாக உயர்ந்தது Aug 28, 2019 ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து 30 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் 29 ஆயிரத்து 704 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து சவரன் விலை 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் அதிகமாகம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தங்கம் விலை நேற்றை விட சவரனுக்கு 264 ரூபாய் உயர்ந்து 29,704 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிராம் தங்கம் 33 ரூபாய் உயர்ந்து 3,713 ரூபாயாக உள்ளது. அதே போன்று ஒரு கிலோ வெள்ளி விலையும் 50 ஆயிரம் ரூபாயைக் கடந்தது. நேற்று கிலோ ஒன்று 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 1900 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 90 காசுகள் உயர்ந்து 51 ரூபாய் 90 காசுகளாக உள்ளது. 

கடலில் மிதக்கும் ராட்சத எரிமலை 28/08/2019

Image
பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பெரிய ராட்சத எரிமலை Aug 27, 2019 பசிபிக் பெருங்கடலில் மிதக்கும் பெரிய ராட்சத எரிமலையின் அளவு, அமெரிக்காவின் மன்ஹாட்டன், வாஷிங்டன் நகரங்களுடனும் 20 ஆயிரம் கால்பந்து மைதானங்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. டோங்காவின் வாவா தீவுகளிலிருந்து தென் பசிபிக் பெருங்கடல் வழியாக பிஜி சென்று கொண்டிருந்த பயணிகள் மைக்கேல் மற்றும் லாரிசா, நடுகடலில் சிறிய பளிங்கு போலவும் கூடைப்பந்து போலவும் பாறைகள் மிதப்பதை பார்த்துள்ளனர். பல மைல் தூரத்துக்கு பரவியிருந்த அவற்றில் சிலவற்றை சேகரித்து, படம்பிடித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கடலில் உள்ள எரிமலை வெடிக்கும்போது வெளியாகும் வாயுகள் நிறைந்த சூடான லாவா, கடல்நீரால் குளிர்விக்கப்பட்டு பியூமிஸை உருவாக்குகிறது. இந்த பியூமிஸ் படலம் பசிபிக் கடலில் பல மைல் தூரத்துக்கு பரவிக்கிடப்பதாக கடல் பயணிகள் மைக்கேல் மற்றும் லாரிசா கூறுகின்றனர். மேலும் அதன் பரப்பளவை மன்ஹாட்டன், வாஷிங்டன், 20 ஆயிரம் கால்பந்து மைதானங்களின் பரப்பளவுடனும் ஒப்பிட்டுள்ளனர். அவர்கள் கொண்டுவந்த பியூமிஸ் துகள்களை ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில்...

ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு 27/08/2019

Image
ஜி.எஸ்.டி.கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு Aug 27, 2019 ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதற்கான அவகாசம் வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி ஆர் 9 ஏ, ஜி.எஸ்.டி. ஆர் 9 சி, உள்ளிட்ட படிவங்களை நவம்பர் 30ம் தேதி வரை தாக்கல் செய்ய வணிகர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹார்லி டேவிட்சன்-ன் புதிய மாடல் டூவீலர் இந்தியாவில் அறிமுகம் 27/08/2019

Image
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மின்சார டூவீலர் ‘லைவ் வயர்‘ மாடல் இந்தியாவில் அறிமுகம் Aug 27, 2019    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முதல் மின்சார இருசக்கர வாகனமாக ‘லைவ் வயர்‘ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சொகுசு அம்சங்கள் கொண்ட இருசக்கர வாகன தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் சொகுசு ரக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம், மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் லைவ் வயர் என்ற இருசக்கர வாகனங்களை தயாரித்து, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது கிளை நிறுவனங்கள் அமைந்துள்ள கனடா, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்தநிலையில், இந்த வாகனம் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிளட்ச், கியர் இல்லாத இந்த வாகனத்தை எளிய முறையில் இயக்கலாம் எனவும், அதிவேகம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டார்சைக்கிள் இயக்கப்பட்ட முதல் 3 விநாடிகளில் ச...

இலவச நீட் பயிற்சி...! 27/08/2019

Image
3 மாவட்டங்களில் இலவச நீட் பயிற்சி இன்று தொடக்கம்..! Aug 27, 2019 சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கியது. இந்த இலவச நீட் பயிற்சி மையங்களில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. Etoos India என்ற பயிற்சி நிறுவனத்துடன், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கின்றனர். ஏற்கெனவே, சென்னையில் 4 மையங்களில் சிறுபான்மை மாணவர்களுக்கு, மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை மூலம் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் NEET & JEE தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 400க்கும் மேற்பட்ட இலவச நீட் பயிற்சி மையங்களில் விரைவில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சுங்க வரியை 5% உயர்த்திய மத்திய அரசு 27/08/2019

Image
இறக்குமதி பொருட்களுக்கு சுங்க வரியை 5 சதவீதம் உயர்த்திய மத்திய அரசு Aug 27, 2019 மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான சுங்க வரியை 5 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பாமாயில் போன்ற உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கான வணிகத்தை பாதுகாக்கும் வகையில், வர்த்தக தீர்வுக்கான இயக்குனரகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு இன்று தொடங்குகிறது... 27/08/2019

Image
தீபாவளி பண்டிகைக்காக அரசுப் பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடங்குகிறது.. Aug 27, 2019 தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசுப் பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடங்குகிறது. தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சென்னையில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும், 1200 பேருந்துகளில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். அவற்றில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு இன்று முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.in மற்றும் 2 தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்காளியை சாலையில் கொட்ட தேவையில்லை...! 27/08/2019

Image
இனி தக்காளியை சாலையில் கொட்ட தேவையில்லை..! பதப்படுத்த புதிய வாகனம்..! Aug 27, 2019 தக்காளி , மாம்பழம் மற்றும் காய்கறிகள் விலை குறைந்து அதனை குப்பையில் வீணாக வீசும் நிலை ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு விவசாயிகளின் தோட்டத்திற்கே சென்று அவற்றை பதப்படுத்தி மதிப்பு கூட்டு பொருளாக மாற்றிக்கொடுக்கும் வசதி கொண்ட 5 வாகனங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தக்காளி ஜாம் ஆகும் விதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு தக்காளி....! ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் இந்த சத்துமிக்க பழம் விளைச்சல் அமோகமான நேரங்களில் மவுசு குறைந்து .... விலை கேட்க ஆள் இன்றி வீதியில் வீசப்பட்டுவிடுவது காலம் காலமாக தொடர்ந்து வந்த சோகம்..! கடந்த காலங்களில் தக்காளியை பறித்து சந்தைக்கு ஏற்றிச்செல்லும் வண்டிக்கு வாடகை கொடுப்பதற்கு கூட முடியாமல் விவசாயிகள், தாங்கள் விளைவித்த தக்காளியை மாட்டுக்கு இரையாக சாலையில் வீசிவிட்டு சென்றனர்..! இந்த நிலையை மாற்ற தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசின் உணவுபதப்படுத்தும் அமைச்சகத்தின் கீழ் தஞ்சையில் இயக்கிவரும் இந்திய உணவு பதன தொழில்...

விவசாயிகள் பயன்பாட்டிற்காக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் 26/08/2019

Image
தக்காளியை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டிய பொருள் தயாரிக்கும் இயந்திரங்கள் Aug 26, 2019 தக்காளியை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்ட 5 வாகனங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண் துறை சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை மாவட்டங்களில் 1,198 ஹெக்டர் பரப்பளவில் சுமார் 5 லட்சத்து 35 ஆயிரத்து 273 மெட்ரிக் டன் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி அதிகமாக விளையும் பருவங்களில் விலை வீழ்ச்சி ஏற்பட்டு, குறைந்த விலையில் விற்கக்கூடிய நிலைமை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தக்காளியை பண்ணை அளவில் மதிப்புக் கூட்டி விற்பனை செய்து பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தக்காளியை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்ட 5 வாகனங்கள் தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தால் கட்டமைப்ப...

புதிய அறிவிப்புகளின் எதிரொலி-நிர்மலா சீதாராமன் 26/08/2019

Image
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புதிய அறிவிப்புகளின் எதிரொலி Aug 26, 2019 பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டதை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை அதிகரித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மேலும் மந்த நிலையில் உள்ள ஆட்டோ மொபைல் துறையை ஊக்கப்படுத்தவும் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் பங்குகளை வாங்கியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்த நேர முடிவில் 792 புள்ளிகள் உயர்ந்து, 37 ஆயிரத்து 494 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 228 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 57 ...

நிலவின் புதிய புகைப்படம் [சந்திரயான்-2] 26/08/2019

Image
சந்திரயான் 2 மூலமாக எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ Aug 26, 2019 நிலவின் புதிய புகைப்படம் சந்திரயான் 2 மூலமாக எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ ஆகஸ்ட் 23ந் தேதி நிலவில் இருந்து 4375கி.மீ தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் டெரய்ன் மேப்பிங் கேமரா - 2 மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ

ரிப்போர்ட் கார்டுகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் 26/08/2019

Image
மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் Aug 26, 2019 தமிழகப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ரிப்போர்ட் கார்டுகள் இனிமேல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அட்டையில் மாணவரின் மதிப்பெண்கள், வருகைப் பதிவேடு, போன்றவை பெற்றோர் கவனத்திற்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இதற்காக பெரும் குவியலாக அட்டைகள் தேவைப்படுகின்றன. இந்நிலையை மாற்ற பெற்றோரின் இமெயிலுக்கு நேரடியாக பதிவு அட்டை விவரத்தை அனுப்பிவைக்கப்படுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் பள்ளிகளிலேயே அதனை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியும் செய்யப்பட உள்ளது. இந்த சேவையை வழங்கக் கூடிய நிறுவனங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இவை பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சின்மயா வித்யாலயா போன்ற சில கல்வி நிறுவனங்கள் ஏற்கனவே மாணவர்களின் விவரங்களை இணையவழியாக பதிவேற்றுகின்றன.

20 நிமிட தூக்கம் சுறுசுறுப்பாக்கும் 26/08/2019

Image
மதியம் 2 - 3 மணிக்குள் 20 நிமிட தூக்கம் சுறுசுறுப்பாக்கும் -ஆய்வு Aug 26, 2019 மதிய நேரத்தில் 20 நிமிட தூக்கம் மனிதனின் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்குவதாக இங்கிலாந்து மருத்துவர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார். நீல் ஸ்டேன்லி என்ற மருத்துவர் தூக்கத்தைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டார். போதிய உறக்கமின்றி தவிப்பதும், நன்றாக குடித்து விட்ட வாகனம் ஓட்டுவதும் ஒன்று என ஏற்கெனவே குறிப்பிட்ட அவர் தற்போது மதிய நேர தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தன்னார்வலர்களை அழைத்து குறிப்பிட்ட இடைவெளிகிளில் மாறி மாறி ஒளிரும் மின் விளக்கை அணைக்கச் சொல்லும் விளையாட்டில் அவர்களை ஈடுபடுத்தினார். பின் அவர்களை இருட்டு அறையில் தூங்கச் செய்து, பின் எழுப்பி மீண்டும் அதே விளையாட்டை ஆடச் செய்தார். அதன்படி 20 நிமிடம் நன்றாகத் தூங்கியவர், எதிர்வினையாற்றும் நேரம் அதிகரித்திருந்ததும், அவர்களின் உடலும், மூளையும் சுறுசுறுப்படைந்திருந்ததையும் கணக்கிட்டுள்ளார். ஆனால் 20 நிமிடத்துக்கும் மேல் உறங்கியவர்கள் மந்தமாக இருந்ததையும் அந்த ஆய்வில் மருத்துவர் நீல் ஸ்டேன்லி சுட்டிக்காட்டுகிறார். காஃபி அருந்தினால் 30 நிமிடம் ச...

எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது 26/08/2019

Image
வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? Aug 26, 2019 எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் வெளி மாநிலத்தவர் பங்கேற்றதாக தொடரப்பட்ட வழக்கில், வெளிமாநிலங்களில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு எந்த அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிட சான்று வழங்கப்பட்டது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்றதாக, மதுரையை சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்தனர். அதில் தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவ கல்லூரிகளில், 85 சதவீத இடங்கள் மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 126 வெளிமாநில மாணவர்கள் பங்கேற்றிருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளத...

கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதிற்கான காரணம் 25/08/2019

Image
கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறிய காரணத்தை உறுதிசெய்த தேசிய கடல் ஆராய்ச்சி மையம் Aug 25, 2019 சென்னை சுற்றுவட்டாரக் கடலோரங்களில் ஒளி உமிழும் உயிரினங்கள் அதிகரித்ததை அறிவியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சென்னை திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து அதனைக் காண மக்கள் ஆர்வத்துடன் கடற்கரைகளுக்குப் படையெடுத்தனர். இதையடுத்து தேசிய கடல் ஆராய்ச்சி மைய அறிவியலாளர்கள் சென்னை நகரின் பல்வேறு கடல் பகுதிகளில் இருந்து நீர் மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் குறிப்பிட்ட அந்த 2 நாட்களில் ஒளியுமிழும் நுண்ணுயிரிகள் கடற்பரப்பில் அதிகரித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோக்டிலுகா சைன்ட்டில்லன்ஸ் ((Noctiluca Scintillans)) எனப்படும் இந்த நுண்ணுயிரிகள், சுற்றுப்புற சூழல் உள்ளிட்டவற்றால் பாதிப்புக்குள்ளாக்கப்படும் போது ஒளியுமிழும் தன்மை உடையவை என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பயோலுமினசென்ஸ் ஆர்கானிசம் ((bioluminescence Organism)) எனப்படும் ஒளியு...

தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை நெருங்குகிறது 25/08/2019

Image
தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Aug 25, 2019

தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு.... 25/08/2019

Image
தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம் Aug 25, 2019 இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தமிழகம், கேரளா, கடலோர கர்நாடகப் பகுதிகள், இமாச்சல், உத்ரகண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக் காற்றின் சாதக போக்கின் காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 35 டிகி...

காவலர் பணியிடங்களுக்கான தேர்வு... 25/08/2019

Image
தமிழகம் முழுவதும் 228 மையங்களில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு..... Aug 25, 2019 8 ஆயிரத்து 888 காவலர் பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வை தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். ஆயுதப்படைக்கு 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கு 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள், 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்பு வீரர் பணியிடங்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. 10-ம் வகுப்பு தேர்ச்சி, கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் உட்பட 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மைங்களில் காலை 10 முதல் 11.20 மணிவரை நடைபெற்றது.சென்னை சென்னை சென்னையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி, மீனாட்சி பெண்கள் கல்லூரி உள்ளிட்ட 13 மையங்களில் 2 ஆயிரத்து 429 பெண்கள் உள்ளிட்ட 19,990 பேர் தேர்வு எழுதினர...

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் 25/08/2019

Image
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் Aug 24, 2019 முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, உடல்நலக்குறைவால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலாமனார். அவருக்கு வயது 66. 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு மே மாதம் வரை மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தவர் அருண்ஜேட்லி. பழுத்த அரசியல்வாதியும், மூத்த வழக்கறிஞரும், மத்திய அமைச்சருமான அருண்ஜேட்லி, சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மே மாதத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஜனவரியில் உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதனால் கடந்த மக்களவை தேர்தலில் அருண் ஜேட்லி போட்டியிடவில்லை. மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் அரசு அமைந்தபோது, அருண்ஜேட்லி உடல்நலக்குறைவை காரணம் காட்டி மத்திய அமைச்சரவையில் இணையவில்லை. இந்நிலையில், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்...

கூகுள் பணியாளருக்கு எச்சரிக்கை... 25/08/2019

Image
கூகுள் பணியாளருக்கு எச்சரிக்கை ..."வந்த வேலை என்னவோ, அதை மட்டும் பாருங்கள் !"-கூகுள் Aug 24, 2019 என்ன வேலைக்காக பணிக்கு எடுக்கப்பட்டீர்களோ, அந்த வேலையை மட்டும் பாருங்கள் என கூகுள் நிறுவனம் தனது பணியாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் தரவுகளை வழங்குதலில் டிரம்புக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக முன்னாள் ஊழியர் கூறியது, பாதுகாப்புத்துறை திட்டங்களை செயல்படுத்துதலில் ஊழியர்களின் வெளிப்படையான போராட்டம், உயர் மட்ட அதிகாரிகள் மீதான பாலியல் புகார்களை கையாண்ட விதத்தில் ஊழியர்களின் அதிருப்தி என, ஊழியர்களை மையப்படுத்தி பல சர்ச்சைகளில் சிக்கியது கூகுள் நிறுவனம். பணி நேரத்தில் 20 சதவீதத்தை தனிப்பட்ட வேலைகளில் ஈடுபடவும் புதிய யோசனைகளை வழங்கவும் கூகுள் வழிவகுக்கும் சூழலில் பணிக்குத் தொடர்பில்லாத அரசியல், செய்திகள் குறித்து பேசி நேரத்தை வீணடிக்காமல் தலை குனிந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஆற்றுமாறு ஒரு லட்சம் பணியாளர்களுக்கு அனுப்பிய மெமோவில் கூகுள் கூறியுள்ளது. மேலும், கூகுள் பணியாளர்களுக்கான ஆன்லைன் மன்றங்களை அதிகமாகவோ, தவறாகவோ பயன்படுத்தி கருத்து தெர...

மத்தியில் பிரதமர் மோடி உணர்ச்சிகரமான உரை 25/08/2019

Image
இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் மோடி உணர்ச்சிகரமான உரை Aug 25, 2019 பஹ்ரைனில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் பலமடங்கு வளர்ச்சியை கண்டுவிடும் என்று தெரிவித்தார். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயித்து தமது அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.செப்டம்பர் 7ம் தேதி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செலுத்திய சந்திரயான் 2 நிலவில் கால்பதிக்க உள்ளதாக மோடி பெருமையுடன் தெரிவித்தார். உலகம் முழுவதுமே இந்தியாவின் விண்வெளித்திட்டங்கள் குறித்து பேசப்படுகிறது என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, இத்தனை சிறிய பட்ஜெட்டில் இத்தனை பெரிய சாதனையை எப்படி நிகழ்த்த முடிகிறது என்று உலகமே வியப்புடன் பார்ப்பதாக கூறினார் . இது முழுக்க முழுக்க இந்தியர்களின் திறமையாலேயே சாத்தியமாகியிருப்பதாகவும் மோடி கூறினார்.அருண் ஜேட்லீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மோடி தனது மிக நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்துவிட்டதாகவும் இதனால் மிகுந்த வலியும் வேதனையும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு தமது சகோதரியைப் போன்ற சுஷ...

உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு 24/08/2019

Image
உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 28 ந் தேதி கலந்தாய்வு Aug 23, 2019 தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 28 ந் தேதி இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அந்தந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே, EMIS இணையதளம் மூலம், முழுவதும் ஆன்லைனில் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 28 ந்தேதி காலை ஒன்பது 30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துவதுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது 24/08/2019

Image
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு Aug 24, 2019 தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 29 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. சவரன் 29 ஆயிரம் ரூபாயையும் கடந்து வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை வரலாறு காணாத விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்பட்டன. இதனிடையே கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை சற்றே குறைவதும், பின்னர் மீண்டும் உயர்வதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 28 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று 29 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ஒரே நாளில் 80 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை வெகு விரைவில் எட்டிவிடும் வேகத்தில் உ...